kandee0702

Sunday, February 9, 2014

பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது யாகூ

பிரபல்யமான மின்னஞ்சல் சேவை வழங்குனர்களுள் ஒருவராகத் திகழும் யாகூ நிறுவனமானது தனது பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றினை விடுத்துள்ளது.
அதாவது பயனர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த மாதங்களில் யாகூ தளத்தினை ஊடுருவும் செயற்பாடுகள் இடம்பெற்றிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்த அதேவேளை தற்போது ஹேக்கர்கள் மீண்டும் மின்னஞ்சல் கணக்குகளை ஹேக் செய்ய எத்தனித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உங்கள் யாகூ மின்னஞ்சலின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு கைப்பேசிகளுக்கு SMS மூலமாகவோ அல்லது மாற்று மின்னஞ்சலின் ஊடாகவோ உள்நுழையும்போது எச்சரிக்கை செய்தியை பெறும்பொருட்டு தகவல்களை வழங்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Cricket Live Score...