வர்த்தக சேவை, தகவல்தொடர்பு, அரசு அமைப்புகள் என அதிகளவு தகவல்களை கையாளும் நிறுவனங்கள் இந்த 11ஜி மென்பொருள் மூலம் பயனடையும் என ஆரக்கிள் இந்தியா துணைத்தலைவர் (தொழில்நுட்ப விற்பனை) கிரோவெர் தெரிவித்தார்.
இந்த புதிய மென்பொருளை பயன்படுத்தி சேகரிக்கப்படும் தகவல்களுக்கு அதிநவீன முறையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில் 11ஜி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், சத்யம், டிசிஎஸ் மற்றும் விப்ரோ ஆகிய கணினி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து 11ஜி மென்பொருளை இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளதாகவும் கிரோவெர் தெரிவித்தார்.
உலகளவில் கடந்த ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 11ஜி, லின்க்ஸ் இயக்கு தளத்திலும் (operating system) செயல்படும் என ஆரக்கிள் வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment